•உயிரே கடவுள்•
உடம்பானது உயிர் எடுத்து வந்ததா?
அல்லது உயிரானது உடம்பெடுத்து வந்ததா?
உடம்பு தான் உயிர் எடுத்ததென்றால், உடம்பும் உயிரும் கூடிய மனிதன் இறந்த பின்னும் அவன் உயிர் அழிவது இல்லையே. ஆகவே.....
இவ்வுடம்பு உண்மையல்ல, என்பதை உணர்ந்து,
உயிரை மெய் என்பதை அறிந்து,
உடம்பில் மெய்ப் பொருளாக உயிர் இருப்பதைக் கண்டு,
தன்னை மறந்த தியான நிலையிலே இருந்து,
உணர்ந்து கொள்வதே ஞானம்.
மனமெனும் எல்லையைக் கடந்து, ஏகமாக நின்று, எல்லாம் ஒன்றென உணரச்செய்வதே ஞானம்.
இவ்வுடலானது மண், நீர், தீ, காற்று, ஆகாயம் என பஞ்சபூதங்களால் அடுக்கடுக்கான ஆராதாரங்களாய் அமைந்து உள்ளது. தாயின் கருவினிலே புகும் விந்து ஒன்பது வாசல் கொண்ட உடலுயிர் வளர்ந்து இப்பூமியில் ஜனிக்கும். அப்படி வரும் கோடிக்கணக்கான உடல்கள் ஒவ்வொன்றினுள்ளும், உயிரே அதனுள் கடவுளாய் அமர்ந்துள்ளார் என அறியுங்கள்.
ஆகாயமாய் நமக்குள் இருக்கும் மனம் எங்கும் பரவி ஓடிக் கொண்டிருக்கின்றது. அந்த மனத்தை குவித்து நம்முள் நினைவால் நிறுத்தி உயிரை நினைத்து, நோக்கி தியானம் செய்ய, மனத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி அது சுத்த நிர்மலமாய் ஆகும்.
பார்க்கும் இடமெலாம் நீக்கமற நிற்கும் உயிர் ஜோதியை தனக்குள்ளே கண்டு, உயிரான கடவுளை எப்போதும் கருத்தினில் வைத்து தியானியுங்கள், இறவாநிலை பெற அதுவே வழி காட்டும்.
இவ்வுடம்பை சுடுகாட்டில் வைத்து எரிக்கும் போது அது ஒன்றுக்கும் உதவாத ஒரு பிடி சாம்பலாகும். அது போல ஞானம் சிறிதும் இல்லா நெஞ்சம் உடையவர்களிடம் நல்லது ஒன்றும் இருக்காது. அறிவாக சுடர் விடும் உயிர் சோதியை அறிந்து அங்கேயே உன் உணர்வையும், மனதையும் நிலை நிறுத்தி தியானம் செய்து வந்தால் தேனில் ஒடுங்கியிருந்த ருசியானது நாவில் ஊறுவதுபோல், உயிர் கடவுள் அருளால் ஆனந்தம் கிடைக்கும்.
மாடமாளிகைகள் கட்டி, செல்வங்களையும் சம்பாதித்து, தம் மனைவி மக்களோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் நாட்களில், திடீரென்று ஒரு நொடியில் உயிர் போனபின் அவ்வுடல் பிணமாக கிடப்பதைக் கண்டும், உயிர் போனதை உணர்ந்தும், இன்னமும் உயிரை அறியாமல் இருக்கின்றீர்கள். இவ்வுடலில் உயிராய் நின்று, ஆட்டுவித்த உண்மையை உணர்ந்து, இறவா நிலைபெற்று, இறைவனை சேர உயிர் தியானம் செய்யுங்கள்.
உயிரே கடவுள்...
உடம்பானது உயிர் எடுத்து வந்ததா?
அல்லது உயிரானது உடம்பெடுத்து வந்ததா?
உடம்பு தான் உயிர் எடுத்ததென்றால், உடம்பும் உயிரும் கூடிய மனிதன் இறந்த பின்னும் அவன் உயிர் அழிவது இல்லையே. ஆகவே.....
இவ்வுடம்பு உண்மையல்ல, என்பதை உணர்ந்து,
உயிரை மெய் என்பதை அறிந்து,
உடம்பில் மெய்ப் பொருளாக உயிர் இருப்பதைக் கண்டு,
தன்னை மறந்த தியான நிலையிலே இருந்து,
உணர்ந்து கொள்வதே ஞானம்.
மனமெனும் எல்லையைக் கடந்து, ஏகமாக நின்று, எல்லாம் ஒன்றென உணரச்செய்வதே ஞானம்.
இவ்வுடலானது மண், நீர், தீ, காற்று, ஆகாயம் என பஞ்சபூதங்களால் அடுக்கடுக்கான ஆராதாரங்களாய் அமைந்து உள்ளது. தாயின் கருவினிலே புகும் விந்து ஒன்பது வாசல் கொண்ட உடலுயிர் வளர்ந்து இப்பூமியில் ஜனிக்கும். அப்படி வரும் கோடிக்கணக்கான உடல்கள் ஒவ்வொன்றினுள்ளும், உயிரே அதனுள் கடவுளாய் அமர்ந்துள்ளார் என அறியுங்கள்.
ஆகாயமாய் நமக்குள் இருக்கும் மனம் எங்கும் பரவி ஓடிக் கொண்டிருக்கின்றது. அந்த மனத்தை குவித்து நம்முள் நினைவால் நிறுத்தி உயிரை நினைத்து, நோக்கி தியானம் செய்ய, மனத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி அது சுத்த நிர்மலமாய் ஆகும்.
பார்க்கும் இடமெலாம் நீக்கமற நிற்கும் உயிர் ஜோதியை தனக்குள்ளே கண்டு, உயிரான கடவுளை எப்போதும் கருத்தினில் வைத்து தியானியுங்கள், இறவாநிலை பெற அதுவே வழி காட்டும்.
இவ்வுடம்பை சுடுகாட்டில் வைத்து எரிக்கும் போது அது ஒன்றுக்கும் உதவாத ஒரு பிடி சாம்பலாகும். அது போல ஞானம் சிறிதும் இல்லா நெஞ்சம் உடையவர்களிடம் நல்லது ஒன்றும் இருக்காது. அறிவாக சுடர் விடும் உயிர் சோதியை அறிந்து அங்கேயே உன் உணர்வையும், மனதையும் நிலை நிறுத்தி தியானம் செய்து வந்தால் தேனில் ஒடுங்கியிருந்த ருசியானது நாவில் ஊறுவதுபோல், உயிர் கடவுள் அருளால் ஆனந்தம் கிடைக்கும்.
மாடமாளிகைகள் கட்டி, செல்வங்களையும் சம்பாதித்து, தம் மனைவி மக்களோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் நாட்களில், திடீரென்று ஒரு நொடியில் உயிர் போனபின் அவ்வுடல் பிணமாக கிடப்பதைக் கண்டும், உயிர் போனதை உணர்ந்தும், இன்னமும் உயிரை அறியாமல் இருக்கின்றீர்கள். இவ்வுடலில் உயிராய் நின்று, ஆட்டுவித்த உண்மையை உணர்ந்து, இறவா நிலைபெற்று, இறைவனை சேர உயிர் தியானம் செய்யுங்கள்.
உயிரே கடவுள்...