Friday, August 10, 2018

TANTRA-தந்திரம்

SEVEN CHAKRAS सात चक्र ஏழு சக்கரங்கள்
------------------------------------------------
MULADHARA }}}}}}} 1 {{{{{{{ மூலாதாரம் :
------------------------------------------------
இன்பம் விளங்கும் மூலாதாரத்தில் வாசம் செய்யும்
வாலைப் பெண் தன் நிகரற்ற நாயகி குண்டலினி சக்தி !
வாலையின் யந்திரம் - முக்கோண பீடம்
வாலையின் மந்திரம் - அ+உ+ம் , ம்+உ+அ.
--------------------------------------
வாலைசக்தி :வாலைக் கும்மி :
--------------------------------------
"வாலையின் அட்சரம் மூன்றாகும் அதை
வாய் கொண்டு சொல்பவர் யார் காணும்
மேல் ஒன்றும் கீழ் ஒன்றும் மத்திமமுங்கூட்டி
விரைந்து பாரடி ஞானப் பெண்ணே.!"
- வாலைக் கும்மி -
வாலையின் யந்திரம் - முக்கோண பீடம்
வாலையின் மந்திரம் - அ+உ+ம் , ம்+உ+அ.
இன்பம் விளங்கும் மூலாதாரத்தில்
வாசம் செய்யும் வாலைப் பெண்
தன் நிகரற்ற நாயகி குண்டலினி சக்தி !
வாலையின் மூன்றெழுத்தான அட்சரங்கள்
"ஐம் கிலீம் சௌம்" என்ற பிஜாட்சரங்கள் !
வாலையின் அட்சரம் மூன்றாகும்
வாலையின் மந்திரம் அ+உ+ம் என்னும்
ஓங்கார அட்சரங்களும், அதை மாற்றி வரும்
ம்+உ+அ ....ஆக..வாலையின் அருள் கிடைக்க,
ஓம் என்ற அட்சரம் தானுண்டு !
---------------------------
பாலாதிரிபுர சுந்தரி :
---------------------------
பாலாம்பிகையான வாலையை
அனைத்துக்கும் ஆதாரமானவள்.
இந்த ஆதார சக்தியினை வழிபட
அகாரம், (சிகாரம்) உகாரம், மகாரம்
என்ற மூன்றேழுத்து ஓங்கார மந்திரமே
மூல மந்திரமாகும்.
வாலையை தங்கள் உடலில் இனங்கண்டு,
இந்த ஓங்காரத்தின் உட்பொருளை உணர்ந்து
அதன் வழி நின்று சித்தியடைவதுதான்
வாலைபூசையின் நோக்கம்.
இந்தஅம்சம் பத்து வயதுக்குறிய ஒரு
சின்னஞ் சிறிய பெண்ணின் அம்சம்
இந்த உயர் தெய்வத்தைப் பற்றி
கொங்கணவர் பின்வருமாறு கூறுகிறார்.
"வாலையைப் பூசிக்க சித்தரானார்
வாலைக் கொத்தாசையாய் சிவகர்த்தரானார்
வேலையைப் பார்த்தல்லோ கூலி வைத்தார்
இந்த விதம் தெரியுமோ? வாலைப் பெண்ணே!"
சித்தர்கள் வணங்கிய அந்த பால தெய்வத்தின் பெயர் வாலை.
ஆதி சக்தியின் பத்து வயது பெண் வடிவமே இந்த வாலை. அனைத்திற்க்கும் ஆதி காரணமான இந்த வாலை தெய்வம்
நமது உடலில் இருந்து இயங்குவதை உணர்ந்து கொண்டு,
சின்னஞ்சிறு பெண்ணான வாலையின் அருளால் சித்தியடைந்து, பின் அவளை கண்ணித் தெய்வமாக வழிபட்டு படிப்படியாக மனோன்மணித் தெய்வமாக பூசை முடித்து, இறுதியில் ஆதிசக்தியின் அருள் பெற்று முக்தி நிலையான மெய்ஞான நிலையினை அடைந்தனர். இதுவே ஞானத்தின் அதி உயர் நிலை. இந்த நிலை எய்தியவர்களே சித்த புருஷர்கள்.
-----------------------------------------
வாலை பூசை என்பது என்ன?
-----------------------------------------
இதன் அருமையினை அகத்தியர்
பின் வருமாறு விளக்குகிறார்
"கூடப்பா துரியமென்ற வாலை வீடு
கூறரிய நாதர் மகேச்சுவரியே யென்பர்
நாடப்பா அவள் தனையே பூசை பண்ணு
நந்திசொல்லும் சிங்காரம் தோன்றும் தோன்றும்
ஊடப்பா சிகாரவரை எல்லாம் தோன்றும்
ஊமையென்ற அமிர்தவெள்ளம் ஊறலாகும்
தேடப்பா இது தேடு காரியம் ஆகும்
செகத்திலே இதுவல்லவோ சித்தியாமே
வாமென்ற அவள் பாதம் பூசை பண்ணு
மற்றொன்றும் பூசை அல்ல மகனேசொன்னேன்!"
"மனமு மதியு மில்லாவி டில்வழி
மாறுதல் சொல்லியே யென்ன செய்வாள்
மனமுறுதியும் வைக்க வேணும் பின்னும்
வாலை கிருபையுண்டாகவேணும்"
வாலைசக்தி தெய்வத்தைப் பற்றி
கருவூரார் தனது கருவூரார் பூஜாவிதி
என்னும் நூலில் பின்வருமாறு கூறுகிறார்.
"பத்து வயதாகும் வாலையவள்
மர்மம் வைத்து பூசை பண்ண
மதியுனக்கு வேணுமடா அதிகமாக
கனரிது சிறு பிள்ளை கன்னி கன்னி
ஆமிவளை அறிந்தவர்கள் சித்தர் சித்தர்
அறிந்ததுமே மன அடக்கம் வந்து சேரும்
நாட்டிலே சொன்னாயானால் நகைப்பர்"
----------
படங்கள் :
----------
1 - வாலை சக்தி - Vaalai Sakthi
2 - திரிபுரதியானம் - Thiripura Dhyanam
3 - ஸகலஹ்ரீம் - sakalahrim
Shiva Raja yogi Dr.Suresh
Cell:+91 98843 80229

No comments:

Post a Comment